திங்கள், 31 டிசம்பர், 2018

கர்த்தரிடம் தாழ்மை படுங்கள்


யாக்கோபு 4 :10. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! யாவருக்கும் கிருபை பெருகுவதாக! ஆமென்! இந்த வருடத்தின் கடைசி நாளில் உங்களை  சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தருடைய சமூகத்தில் இந்த நாளில் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து  புதிய வருடத்திற்குள்ளாக கடந்து போவோம் வாருங்கள்! 

அவர் செய்த நன்மைகளை சொல்லி அவரை மகிமைப்படுத்தி, நாம் தேவசித்தம் செய்யாமல் தவறியபோது அவருடைய கிருபை நம்மை தாங்கியதை நினைத்து அவரை துதித்து, நம் தவறுகளை/பாவங்களை இந்த தருணத்தில் அவரிடத்தில் முழுமனதோடு மனங்கசந்து  அறிக்கை பண்ணுவோம். தேவன் கிருபையாய்  மன்னிப்பார். ஒருவேளை  மறந்துபோயிற்று என்று எண்ணுவீர்களானால், இப்பொழுதே தேவ சமூகத்தில் தேவ ஒத்தாசையோடு அவரிடத்தில் ஆண்டவரே நான் உண்மையாய் உம்மிடத்தில் என் மீறுதல்களை ஒவ்வொன்றையும்  அறிக்கை பண்ண விரும்புகிறேன், உமது கிருபையினால் எனக்கு என் மீறுதல்களை ஞயாபகப்படுத்தி  என்னை உம் பிள்ளையாய் அங்கீகரித்தருளும் என்று கர்த்தரிடம் வேண்டிக் கொள்ளுவோம். நிச்சயம் கர்த்தர் உங்களுக்கு இரங்கி உங்கள் மீறுதல்களை காண்பித்து தம்மோடு உங்களை ஒப்புரவாகி கொள்ளுவார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்! 

போதை பழக்கவழக்கங்களிலிருந்து, குடிவெறிகளிலிருந்து, சகலவித கசப்புகளிலிருந்து, பொறமையிலிருந்து, வேசித்தனத்திலிருந்து, வெறிகளிலிருந்து, தூஷணங்களிலிருந்து, முரட்டாடத்திலிருந்து, கோபங்களிலிருந்து, இன்னும் மறைவான பாவங்களிலிருந்து  வரும் புதிய ஆண்டிலே இப்படிப்பட்ட அநேகவிதமான பழைய பாவத்தோடு பிரவேசியாமல், நம்மை தேவனிடத்தில் ஒப்புரவாக்கி  புது சிருஷ்டியாக ஒப்புக்கொடுப்போம்! 

தேவன் உங்களை பிரகாசிப்பார் ஆமென்! கடந்த நாட்களில் இழந்து போனவைகளை நிச்சயம் கர்த்தர் தந்து உங்களை உயர்த்துவார் ஆமென்! தேவசமாதானம் உங்களை ஆளக்கடவது ஆமென்! கிருபை யாவரோடும் இருப்பதாக ஆமென்!

அனுப்பப்பட்டவன்
சகோ புருஸ் 
ஜெப உதவிக்கு : +91 970 36 76184


கருத்துகள் இல்லை: