மெய்யான ஒளி
யோவான் 1:9 "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி."
அன்பு சகோதர சகோதரிகளே! இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் இருளில் இருப்பதை விரும்புகிறதில்லை. சூரியன் மறைந்த பின் நாம் வெளிச்சத்தில் இருக்கவே விரும்புகிறோம். ஆகவே நாம் ஒரு செயற்கையான ஒளியை உண்டாக்கி அதாவது மின்சாரம் மூலம் வெளிச்சத்தை உண்டாக்கி அதிலே வாழுகிறோம். உறங்கும்போதும் கூட ஒரு சிறிய ஒளி விளக்கை வைத்து உறங்குகிறோம்! ஏனென்றால் இருளின் ஆதிக்கத்தை நாம் விரும்புகிறதில்லை, காரணம் இருள் பயத்தின் அறிகுறி வெறுமையின் அறிகுறி.
இப்படியிருக்க நம் வாழ்வே இருளில் இருந்தால்? அது என்ன வாழ்வின் இருள் சற்று விளக்கமாக பார்ப்போம். பாவம் என்கிற இருள், கடன் பாரம் என்கிற இருள், வியாதி என்கிற இருள், குடும்ப சாபம், மன அமைதி இல்லாமை, குடும்ப சமாதானம் இல்லாமை, பிசாசின் போராட்டம், பில்லிசூனியம், ஏவல், எவ்வளவு சம்பாதித்தாலும் பொத்தலான பையில் போடும் நிலைமை, மரண பயம், வெறுமை, தனிமை இப்படி பல வகையான இருள்.
இப்படிப்பட்ட இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு உண்டோ, அப்படியானால் இந்த நற்செய்தி உங்களுக்கு தான்!
உங்கள் துக்கம் சந்தோசமாய், அதாவது இருள் வெளிச்சமாய் மாறும்! தேவன் தன் குமாரனாகிய இயேசுவை உங்களுக்காக அனுப்பி இந்த இருளில் இருந்து நீங்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்.
கர்த்தராகிய இயேசு உங்கள் பாவங்களுக்காக உங்கள் சாபங்களுக்காக, மேற்கூறியஎல்லா இருளுக்காக கல்வாரி சிலுவையில் வெற்றி சிறந்தார். நீங்கள்
மேற்கூறிய எதோ ஒரு இருளில் இருக்கலாம்! அல்லது வெளியே சொல்லமுடியாத ஏதோ ஒரு இருளில் இருக்கலாம். இயேசு உங்களுக்காக வந்து உங்களை இருளில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்து பிரகாசிக்க விரும்புகிறார்.
அதாவது பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து, தீராத நோயிலிருந்து, வியாதியிலிருந்து,பிசாசின் போராட்டத்திலிருந்து, பில்லிசூனியத்திலிருந்து உங்களை விடுவித்து தன்ஒளியிலே நீங்கள் எப்பொழுது சந்தோசத்தோடு இருக்கும்படி விரும்புகிறார். இயேசுவுக்கு உங்கள் இருதயத்தில் ஒரு இடம் கொடுத்துப்பாருங்கள். உங்கள் கண்ணீர் யாவும் மாறும்! கவலைகள் மாறும்! துக்கம் மாறும்!
அன்பு சகோதரா சகோதாரி! ஒரே ஒரு முறை இயேசுவுக்காக மட்டும் உன் இருதயத்தை ஒப்புக்கொடுப்பாயா? இன்று உன்னுடைய எல்லா இருளையும் உன்னைவிட்டு நீக்கி விட இயேசு வந்திருக்கிறார். இன்று அவரிடம் வருவாயா? உன் இருதயத்தை அவருக்கு மட்டும் கொடுப்பாயா?
இயேசு கொடுக்கும் வெளிச்சம் மறைந்து போவதில்லை, அது எப்படிப்பட்டதாய் இருக்கிறது. அது நித்திய நித்தியமாக உங்களை தேவன் அருளும் இராஜ்ஜியமாகிய பரலோக வாழ்வில் அதாவது வைகுண்டப்பதவி அல்லது சிவலோகபதவி உங்களுக்கு கிடைக்கும்படி கிருபை செய்கிறது.
இந்த உலகத்தின் தேவைகள் மாத்திரம் அல்ல பரலோக பாக்கியத்தை பெற்றுக்கொள்ளும்படி அருள் செய்கிற ஜீவ ஒளியாய் இருக்கிறது.
பின்வரும் ஜெபத்தை உங்கள் இருதயத்திலிருந்து நம்பிக்கையோடு ஏறெடுங்கள்! கர்த்தர் உங்களை பிரகாசிப்பார்.
ஜெபம்! அன்பு இயேசுவே! நான் உம்மை என் இருதயத்திலிருந்து கூப்பிடுகிறேன்! என்னுடைய பாவங்களை மன்னித்து என் பிரச்சனைகளில் இருந்து விடுதலை தாரும். ஆமென்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக