திங்கள், 31 டிசம்பர், 2018

கர்த்தரிடம் தாழ்மை படுங்கள்


யாக்கோபு 4 :10. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! யாவருக்கும் கிருபை பெருகுவதாக! ஆமென்! இந்த வருடத்தின் கடைசி நாளில் உங்களை  சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தருடைய சமூகத்தில் இந்த நாளில் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து  புதிய வருடத்திற்குள்ளாக கடந்து போவோம் வாருங்கள்! 

அவர் செய்த நன்மைகளை சொல்லி அவரை மகிமைப்படுத்தி, நாம் தேவசித்தம் செய்யாமல் தவறியபோது அவருடைய கிருபை நம்மை தாங்கியதை நினைத்து அவரை துதித்து, நம் தவறுகளை/பாவங்களை இந்த தருணத்தில் அவரிடத்தில் முழுமனதோடு மனங்கசந்து  அறிக்கை பண்ணுவோம். தேவன் கிருபையாய்  மன்னிப்பார். ஒருவேளை  மறந்துபோயிற்று என்று எண்ணுவீர்களானால், இப்பொழுதே தேவ சமூகத்தில் தேவ ஒத்தாசையோடு அவரிடத்தில் ஆண்டவரே நான் உண்மையாய் உம்மிடத்தில் என் மீறுதல்களை ஒவ்வொன்றையும்  அறிக்கை பண்ண விரும்புகிறேன், உமது கிருபையினால் எனக்கு என் மீறுதல்களை ஞயாபகப்படுத்தி  என்னை உம் பிள்ளையாய் அங்கீகரித்தருளும் என்று கர்த்தரிடம் வேண்டிக் கொள்ளுவோம். நிச்சயம் கர்த்தர் உங்களுக்கு இரங்கி உங்கள் மீறுதல்களை காண்பித்து தம்மோடு உங்களை ஒப்புரவாகி கொள்ளுவார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்! 

போதை பழக்கவழக்கங்களிலிருந்து, குடிவெறிகளிலிருந்து, சகலவித கசப்புகளிலிருந்து, பொறமையிலிருந்து, வேசித்தனத்திலிருந்து, வெறிகளிலிருந்து, தூஷணங்களிலிருந்து, முரட்டாடத்திலிருந்து, கோபங்களிலிருந்து, இன்னும் மறைவான பாவங்களிலிருந்து  வரும் புதிய ஆண்டிலே இப்படிப்பட்ட அநேகவிதமான பழைய பாவத்தோடு பிரவேசியாமல், நம்மை தேவனிடத்தில் ஒப்புரவாக்கி  புது சிருஷ்டியாக ஒப்புக்கொடுப்போம்! 

தேவன் உங்களை பிரகாசிப்பார் ஆமென்! கடந்த நாட்களில் இழந்து போனவைகளை நிச்சயம் கர்த்தர் தந்து உங்களை உயர்த்துவார் ஆமென்! தேவசமாதானம் உங்களை ஆளக்கடவது ஆமென்! கிருபை யாவரோடும் இருப்பதாக ஆமென்!

அனுப்பப்பட்டவன்
சகோ புருஸ் 
ஜெப உதவிக்கு : +91 970 36 76184


செவ்வாய், 25 டிசம்பர், 2018

கிறிஸ்மஸ்

லூக்கா 2 : 11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! கிருபை யாவரோடும் இருப்பதாக! உங்கள் யாவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பிறந்தார். அவர் ஒரு சாதாரண மனிதனாய் அதே சமயத்தில் தேவவல்லமை உள்ளவராக இந்த உலகில் உங்களுக்காகவும் சகல மனிதர்களுக்காகவும் இரட்சகராய் பிறந்தார்.  இரட்சகர் என்றால் எல்லா பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் பிசாசின் பிடிகளில் இருந்தும் நம்மை விடுவிக்கும்படி பிறந்தார்.  இயேசு பிறந்த போது அந்த செய்தி ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு முதலாவது தேவதூதர்கள் மூலமாய் அறிவிக்கப்பட்டது. ஒரு பொருட்டாய் எண்ணப்படாதவர்களை பரலோகம் எண்ணிப்பார்த்தது என்ன ஒரு வியப்பு! இந்த உலகில் உள்ள எந்த ஒரு மனிதனும் புறக்கணிக்கப்பட கூடாது என்பதை தேவன் இதன் மூலம் நாம் அறியும்படி செய்கிறார்.  ஆகவே சிறுமையானவர்களை நாம் எப்போதும் நினைக்கவேண்டும்/சேர்த்துக்கொள்ள வேண்டும்  என்று தேவன் விரும்புகிறதை இவ்வசனத்தின்படி அறிகிறோம். ஏசாயா 58 :7 துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், இயேசு பிறந்த பொழுது மேய்ப்பர்கள் இயேசு இருந்த இடத்தில் அதாவது சத்திரத்தின் முன்னணையிலே  வந்து அவரை தரிசித்தார்கள். இந்த பகுதிலிருந்து இயேசு பிறக்கும்போதே சிறுமையானவர்களை அவர் சேர்த்துக்கொள்ளுகிறதை பார்க்கிறோம்! அப்படிபோல ஞானிகளையும் அவர் சேர்த்துகொள்கிறதை மத்தேயு 2: 10,11ல் வாசிக்கிறோம்! எளியவன் என்றும் இல்லை, உயர்ந்தவன் என்றும் இல்லை ஆண்டவரை பார்க்கவேண்டும் என்று ஆவல் கொள்ளுகிற யாவரும் அவரை காண்பார்கள் அவரும் அவர்களை சேர்த்துக்கொள்ளுவார். ஆமென்! வித்தியாசமே இல்லை. 

இயேசு பிறந்த பொழுது லூக்கா 2 :14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். இப்படியாக  தூதர்கள் தூதிக்கிறதை பார்க்கிறோம்! இயேசு பிறக்கும் போதே பிதாவை மகிமை படுத்துகிறவராய் அதேபோல் பூமியில் சமாதானம் அருளும்படி பிறந்தார். மாத்திரம் அல்ல இயேசுவின் பிறப்பு மனுஷர் மேலும் பிரியம் உண்டாக காரணம் ஆயிற்று! தேவனுக்கே மகிமை! 

கிறிஸ்து பிறப்பை அனுசரிக்கும் அல்லது கொண்டாடும் நீங்கள் கர்த்தராகிய இயேசு செய்தது போல் யாவரையும் சமநோக்கு பார்வையோடு அணுகுகிறீர்களா? தேவனை மகிமைப்படுத்துகிறீர்களா? சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருக்கிறீர்களா?  மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துகிறவர்களை இருக்கிறீர்களா? சற்று ஆராய்ந்து பார்ப்போம்! அப்படி இல்லையென்றால் இந்த  கிறிஸ்மஸ் நாட்களில் ஒரு தீர்மானத்தோடு கடந்து போவோம் தேவகிருபை யாவரோடும் இருப்பதாக ஆமென்! 


அனுப்பப்பட்டவன் 
சகோ  புரூஸ் 
கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள் 
ஜெப உதவிக்கு  +91 970 36 76 184

வெள்ளி, 21 டிசம்பர், 2018

ஞானஸ்நானம்

*ஞானஸ்நானம்*


*1. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறுதல்* 


மாற்கு 16: 16. *"விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்."*

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! கிருபை யாவரோடும் இருப்பதாக! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை / கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று சத்திய வேதம் சொல்லுகிறதுஅவரை விசுவாசியாமல் ஞானஸ்நானம் பெறுதல் எவ்விதத்திலும் பிரயோஜனம் இல்லை. சில சபைகளில் குழந்தை ஞானஸ்நானம் முறை இருக்கிறதுஅது வேதத்தில் இல்லாத ஒன்று. குழந்தை ஞானஸ்நானம் அல்லது பிரதிஷ்டை செய்து பக்தி மார்க்கத்தில் வார்ப்பது நல்லது தான்ஆனாலும் அக்குழந்தை வளர்ந்தபின் கர்த்தரை ஏற்றுக்கொண்டு தன்  பாவத்தை அறிக்கையிட்டு  ஞானஸ்நானம் பெற்றால் தான் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியும் என்பதை நிச்சயமாய் அறியுங்கள்.  கர்த்தரை பற்றுகிற  விசுவாசம் இல்லாமல் கட்டாயத்தினால்   ஞானஸ்நானம் பெறுகிற அல்லது பெற்றவர்கள் நிச்சயமாய் பரலோக இராஜ்ஜியம் செல்ல முடியாது. கர்த்தரை வாயினால் அறிக்கையிட்டு இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே!  ஆகவே முழுமையாய் அவரை இருதயத்தில் விசுவாசித்து  ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வோம் அப்பொழுது மீட்கப்படுவோம்.       

*2. மனம் திரும்பி ஞானஸ்நானம் பெறுதல்* 


*அப்போஸ்தலர் 2 : 38* பேதுரு அவர்களை நோக்கி: *நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று* இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.


மனம் திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டும்! அது என்ன மனம் திரும்புதல்?  பழைய வாழ்வை விட்டுஅதாவது பாவ வாழ்வைவிட்டு மனம் திரும்பி ஞானஸ்நானம்  பெற வேண்டும்.  எது பாவம் *யோவான் 5 : 17. அநீதியெல்லாம் பாவந்தான்;*  கர்த்தருடைய வேதத்தில் சொல்லுகிற ஒவ்வொரு காரியத்தையும் கவனித்து நடந்துசத்திய வேதம் காண்பிக்கிற பாவங்களை விட்டு அதாவது பின்வரும் வசனத்தின்படி *கலாத்தியர் 5 : 19 – 21* மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றனஅவையாவன:  விபசாரம்வேசித்தனம்அசுத்தம்காமவிகாரம்விக்கிரகாராதனைபில்லிசூனியம்பகைகள்விரோதங்கள்வைராக்கியங்கள்கோபங்கள்சண்டைகள்பிரிவினைகள்மார்க்கபேதங்கள்,  பொறாமைகள்கொலைகள்வெறிகள்களியாட்டுகள் முதலானவைகளே


நீங்கள் ஒருவேளை நினைக்கலாம் நான் வேசித்தனம் பண்ணவில்லையே என்றுகர்த்தராகிய இயேசு கிறிஸ்து சபைக்கு தலையாய் மாத்திரம் அல்ல பின்வரும் வசனத்தின் படி *எபேசியர் 5 :29 – 33*  தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; *கர்த்தர்* சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும்அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுதன் மனைவியுடன் இசைந்துஇருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.  *இந்த இரகசியம் பெரியதுநான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.* எப்படியும்உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோலதன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள். *இவ்வசனங்களின்படி கிறிஸ்து சபையின் புருஷனாய் இருக்கிறார்.* ஆகவே ஒரு மனைவியானவள் தன் புருஷனுடைய விருப்பத்தை நிறைவேற்ற எப்படி முற்படுவாளோ அப்படிபோலவே  சபையும் அதாவது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அங்கம் வகிக்கும் நீங்களும் அவருக்கு மனைவியாய் இருக்கிறீர்கள் என்று எப்போதும் நினைத்து அவரின் விருப்பபடி கட்டளையின்படி நடக்க வேண்டும்.  

*எரேமியா 3 : 9* பிரசித்தமான அவளுடைய *வேசித்தனத்தினாலே* தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; *கல்லோடும் மரத்தோடும் விபசாரம்* பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார். இவ்வசனத்தின் படி ஆண்டவரை விட்டு விக்கிரகத்தை வணங்கினதால் ஆண்டவர் ஜனங்களை பார்த்து விபசாரமும் வேசித்தனமும் பண்ணீர்கள் என்று சொல்லுகிறார்அதாவது கர்த்தரை விட்டு எதோ ஒரு காரியத்தை முக்கியப்படுத்துவோமென்றால் அது விக்கிரக ஆராதனையாய் மாறுகிறது. ஆகவே கிறிஸ்துவின் மனைவியாகிய நாம் பயபக்தியாய் அவரையே மாத்திரம் சார்ந்து நடப்போம்வேசித்தனமில்லாத வாழ்வை கர்த்தருக்காய் வாழ்வோம்! மனம் திரும்புங்கள்!  


இன்றைக்கு ஆபாச படங்கள் அல்லது ஆபாச திரைப்படங்கள் இணையதளம் மற்றும் கைபேசி மூலம் பரவி அசுத்தத்தையும் காமவிகாரத்தையும் உண்டுபண்ணி நம் பரிசுத்த வாழ்வை கெடுக்கிறது. இப்படிப்பட்டவைகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும்! 

*எபேசியர் 5 : 5* விபசாரக்காரனாவதுஅசுத்தனாவது, *விக்கிரகாராத னைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது* தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. *பொருளாசையை  விக்கிரக ஆராதனை* என்று வேதம் குறிப்பிடுகிறதுநாம் பொருளாசைகளை விட்டு மனம் திரும்பவேண்டும். 

பில்லிசூனிய பாவத்தில் இருந்தால் அப்படிபட்டவைகளை விட்டு விலக வேண்டும்.  அப்படிபோல் *I சாமுவேல்15 : 23. இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியபாவத்திற்கும்,* முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறதுவெளித்தோற்றத்திற்கு கர்த்தருக்கு கீழ்படிவதை காண்பித்து அல்லது முழுமையான கீழ்ப்படிதல் இல்லாமல் பகுதியாய் கீழ்ப்படிவதை வேதம் இரண்டகம்பண்ணுதல்  என்று சொல்லுகிறது. இப்படிப்பட்ட கிரியைகளை விட்டு விலகவேண்டும். 

இப்படியாக மாம்சத்தின் கிரியைகளில் இருந்து முற்றிலும் விலகி மனம் திரும்ப வேண்டும். மாத்திரமல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை விசுவாசித்து அவரிடத்தில் சேரவேண்டும்.  இதுவே மனம் திரும்புதலாம் ஆமென்! தேவனிடத்தில் திரும்பி அவரையே சார்ந்து வாழ முற்படுவோம். நாம் முதலாவது இடம் கொடுக்கும்போது தேவன் தம் கிருபையை நமக்கு தந்து நம்மை நடத்துவார். 

*3. மூழ்கி  ஞானஸ்நானம் பெறுதல்*


ஞானஸ்நானம் என்றால்  ஞானம் மற்றும் ஸ்நானம் அதாவது தேவனை பற்றிய அறிவு ஞானமாம்ஜலத்தினால் முழுவதும் கழுவப்படுதல் ஸ்நானம்  
*யோவான் 3 : 23* சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே *தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்,* யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். தெளிப்பு ஞானஸ்நானத்திற்கு ஒரு சிறு குவளை தண்ணீர் போதுமே ஆனால் இவ்வசனத்தின்படி தண்ணீர் மிகுதியாய் இருந்த இடத்திலே அதாவது ஒரு மனிதன் மூழ்கி ஞானஸ்நானம்  பெறவேண்டும் என்கிற அடிப்படையில் தான் தண்ணீர் மிகுதியாய் உள்ள இடத்தை தெரிந்து கொண்டு ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்பதை பார்க்கிறோம். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 
*மத்தேயு 3: 15*  "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: *இப்பொழுது இடங்கொடுஇப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.*  அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்." 
கர்த்தராகிய இயேசு ஒரு பாவமும் அறியாதவர்தன்னுடைய பன்னிரண்டு வயதில் பார்க்கும்போது பிதாவுக்கடுத்தவைகள் என்று சொல்லி தன்னை தேவநீதியில் நடத்த பழக்கியவர்தேவ ஞானத்தோடு செயல்பட்டவர்ஒரு குறைவில்லாதவர்அப்படிப்பட்டவரே எல்லா தேவ நீதியையும் நிறைவற்ற வேண்டும் என்று சொல்லி ஞானஸ்நானம் பெறுவாரென்றால் நாம் அவரை பின்பற்றுகிறவர்களாக அவரைப்போலவே மூழ்கி ஞானஸ்நானம் பெற வேண்டியது அதிக நிச்சயமல்லவா

திங்கள், 17 டிசம்பர், 2018

மெய்யான ஒளி

மெய்யான ஒளி

  
யோவான் 1:9 "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும்   பிரகாசிப்பிக்கிற   ஒளியே   அந்த   மெய்யான ஒளி."


அன்பு சகோதர சகோதரிகளே! இவ்வுலகில்   வாழும்   ஒவ்வொருவரும்    இருளில்  இருப்பதை விரும்புகிறதில்லை. சூரியன் மறைந்த பின் நாம் வெளிச்சத்தில் இருக்கவே விரும்புகிறோம். ஆகவே நாம் ஒரு செயற்கையான ஒளியை  உண்டாக்கி அதாவது மின்சாரம் மூலம் வெளிச்சத்தை உண்டாக்கி அதிலே   வாழுகிறோம்உறங்கும்போதும் கூட ஒரு சிறிய ஒளி விளக்கை வைத்து உறங்குகிறோம்! ஏனென்றால் இருளின் ஆதிக்கத்தை நாம் விரும்புகிறதில்லை, காரணம் இருள் பயத்தின் அறிகுறி வெறுமையின் அறிகுறி.  

இப்படியிருக்க நம் வாழ்வே இருளில் இருந்தால்? அது என்ன வாழ்வின் இருள் சற்று விளக்கமாக பார்ப்போம். பாவம் என்கிற இருள், கடன் பாரம் என்கிற இருள்,  வியாதி என்கிற இருள், குடும்ப சாபம், மன அமைதி இல்லாமை, குடும்ப சமாதானம் இல்லாமை, பிசாசின் போராட்டம், பில்லிசூனியம், ஏவல்,  எவ்வளவு சம்பாதித்தாலும் பொத்தலான பையில் போடும் நிலைமை, மரண பயம், வெறுமை, தனிமை இப்படி பல வகையான இருள்.  

இப்படிப்பட்ட இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு உண்டோ, அப்படியானால் இந்த நற்செய்தி உங்களுக்கு தான்!  

உங்கள் துக்கம் சந்தோசமாய், அதாவது இருள் வெளிச்சமாய் மாறும்! தேவன் தன் குமாரனாகிய இயேசுவை உங்களுக்காக அனுப்பி இந்த இருளில் இருந்து நீங்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்.
  
கர்த்தராகிய இயேசு உங்கள் பாவங்களுக்காக உங்கள் சாபங்களுக்காக, மேற்கூறியஎல்லா இருளுக்காக கல்வாரி சிலுவையில் வெற்றி சிறந்தார்நீங்கள் 
மேற்கூறிய எதோ ஒரு இருளில் இருக்கலாம்! அல்லது வெளியே சொல்லமுடியாத  ஏதோ ஒரு இருளில் இருக்கலாம். இயேசு உங்களுக்காக வந்து உங்களை  இருளில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்து பிரகாசிக்க விரும்புகிறார். 

அதாவது பாவத்திலிருந்துசாபத்திலிருந்துதீராத நோயிலிருந்துவியாதியிலிருந்து,பிசாசின் போராட்டத்திலிருந்துபில்லிசூனியத்திலிருந்து உங்களை விடுவித்து தன்ஒளியிலே நீங்கள் எப்பொழுது சந்தோசத்தோடு இருக்கும்படி விரும்புகிறார்.  யேசுவுக்கு உங்கள் இருதயத்தில் ஒரு இடம் கொடுத்துப்பாருங்கள்.  உங்கள் கண்ணீர் யாவும் மாறும்! கவலைகள் மாறும்! துக்கம் மாறும்!  

அன்பு சகோதரா சகோதாரிஒரே ஒரு முறை இயேசுவுக்காக மட்டும் உன் இருதயத்தை ஒப்புக்கொடுப்பாயாஇன்று உன்னுடைய எல்லா இருளையும் உன்னைவிட்டு நீக்கி விட இயேசு வந்திருக்கிறார்இன்று அவரிடம் வருவாயாஉன் இருதயத்தை அவருக்கு மட்டும் கொடுப்பாயா

இயேசு கொடுக்கும் வெளிச்சம் மறைந்து போவதில்லைஅது எப்படிப்பட்டதாய் இருக்கிறதுஅது நித்திய நித்தியமாக உங்களை தேவன் அருளும் இராஜ்ஜியமாகிய பரலோக வாழ்வில் அதாவது வைகுண்டப்பதவி அல்லது சிவலோகபதவி உங்களுக்கு கிடைக்கும்படி கிருபை செய்கிறது.
  
இந்த உலகத்தின் தேவைகள் மாத்திரம் அல்ல பரலோக பாக்கியத்தை பெற்றுக்கொள்ளும்படி அருள் செய்கிற ஜீவ ஒளியாய் இருக்கிறது 

பின்வரும் ஜெபத்தை உங்கள் இருதயத்திலிருந்து நம்பிக்கையோடு ஏறெடுங்கள்கர்த்தர் உங்களை பிரகாசிப்பார்.  

ஜெபம்அன்பு இயேசுவேநான் உம்மை என் இருதயத்திலிருந்து கூப்பிடுகிறேன்என்னுடைய பாவங்களை மன்னித்து என் பிரச்சனைகளில் இருந்து விடுதலை தாரும்ஆமென்