திங்கள், 7 ஆகஸ்ட், 2017

தேவன் சபைக்கு சொல்லுகிறதை காது உள்ளவன் கேட்கக்கடவன்




உபத்திரவத்தின் பாதை – முடிவில் தேவ எழுப்புதல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவ சமாதானமும் கிருபையும் பெருகுவதாக! தேவன் தம் ஊழியக்காரர்கள் மூலமாக வெளிப்படுத்தியிருந்த தீர்க்க தரிசனத்தின் விவரமாவது 2006ம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகள், முதல் ஏழு ஆண்டுகள் ஆவிக்குரிய செழுமையின் ஆண்டு பின்ஏழு ஆண்டு ஆவிக்குரிய பஞ்சத்தின் ஆண்டு - ஊழியத்தில் மந்த நிலை காணப்படும், ஆத்தும அறுவடை பணியில் தொய்வு ஏற்படும், அதிகமான உபத்திரவம் இருக்கும், உபத்திரவத்தின் முடிவில் மிகப்பெரிய எழுப்புதல் நம் தேசத்தில் தேவன் கட்டளையிடுவார், அதன் பின் இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடாக உலக தேசங்களால் அறியப்படும்! 

இந்த தரிசனத்தின் காரியத்தின் அடிப்படையில் தேவசமூகத்தை நோக்கிப்பார்த்தபோது தேவன் தமது சபையும் தேவமனிதர்களும் என்ன செய்ய வேண்டும் என்று எஸ்தர் புஸ்தகத்தின் அடிப்படையில் காட்டி தந்தார். இந்த காரியத்தை அறிந்து சீக்கிரமாய்/தீவிரமாய் தேவபிள்ளைகளாய் தேவ சமூகத்தை நோக்கிப்பார்ப்போம்! தேவன் உபத்திரவத்தின் நடுவில் இருக்கும் தம் ஜனங்களின் இரத்தப்பலிகளை விசாரிப்பார் ஆமென்!

ஆகாஸ்வேரு ராஜா – கர்த்தருக்கு ஒப்பாக இருக்கிறார்!
எஸ்தர் – தேவ சபைக்கு ஒப்பாக இருக்கிறாள்!
ஆமான் – தேவஜனத்திற்கு எதிராய் இருக்கிற அரசு!
மொர்தெகாய் – தேவ ஊழியர்களை குறிக்கிறது!

ஆகாஸ்வேரு ஆமானை உயர்த்தினது போல தேவன் தற்போதைய அரசையும் உயர்த்தியிருக்கிறார்!
ஆகாஸ்வேரு எஸ்தரை தெரிந்துகொண்டது போல கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம் ஜனங்களை சபையாக தெரிந்துகொண்டிருக்கிறார்.
ஆமான் எப்படி வைராக்கியமாய் யூதர்களை முழுமையாய் அழிக்க வகை தேடினானோ அப்படி போலவே 2021ம் ஆண்டை தாய் மதம் திரும்புதலின் கடைசி நாட்களாக இந்த இராஜாக்கள் அறிவித்திருக்கிறதை நாம் அறிந்திருக்கிறோம்! அதன் எதிரொலியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்கங்கே அநேக ஊழியர்கள் துன்பப்படுத்தப்படுகிறத்தை காண்கிறோம்! அடிக்கப்பட்டார்கள், கொலைசெய்யப்பட்டார்கள், விரோதிக்கப்பட்டார்கள், சபை கூடிவருகிறதர்க்கு தடை செய்யப்பட்டார்கள்! இந்த உபத்திரவம் அதிகமாய் அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு தீவிரப்படும்! அநேகர் ஜீவனை தேவனுக்காய் இழந்து போவார்கள்!

*சபையே! இன்று உன்னிடத்தில் உபத்திரவங்கள் இல்லை என்று காணாததை போல் இராதே!* எஸ்தரை போல் உபவாசத்தொடும் கண்ணீரோடும் விழித்தெழு! தேவசமூகத்தை பார்த்து கதறி அழு! தேவன் மனமிரங்குவார்! அடிக்கப்படுகிற தேவபிள்ளைகளுக்காய் கதறு! மன்றாடு!

மொர்தெகாயாகிய தேவ ஊழியர்களே! தேவன் இந்த தீவிரமான சத்துருவுக்கு விலக்கிக்காக்கும்படி இணைத்து கதறி அழுங்கள்! உங்கள் வீணான கர்வம், அகங்காரம் விட்டு மற்ற ஊழியர்களோடு இணைத்து தேவசமூகத்தை தேடுங்கள்! எஸ்தராகிய சபை கைவிடப்படாதபடி நதியவள்ளவாய் கண்ணீரோடு தேவ சமூகத்தில் அழுது புலம்புவோம்!

ஆமான் தள்ளப்பட்டு மொர்தெகாய் நினைக்கப்பட்டதுபோல தேவன் நம்மை நினைத்தருளுவார் ஆமென்!

ஜெபிக்க வேண்டிய விதமாவது
1. சுத்திகரிக்கப்பட்ட ஜெபம் - பாவ அறிக்கை
2. தேவவசனத்தின்படி நடந்து நம்மை காத்துகொண்டு ஜெபம்
3. ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் கழுவப்பட்ட அனுபவம்
ஊழியர்காளாய் இணைத்து அவரவர் பகுதியில், உங்கள் சபையில், உங்கள் ஊழியத்தில் இந்த காரியத்தை நினைத்து செயல்படுவோம்! ஜெயம்பெறுவோம்!
2021 தாய்மதம் திரும்பும்நாள் எழுப்புதலின் நாளாய் ஆநேகர் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராய் ஏற்றுகொள்ளும் நாளாய் மாறும் ஆமென்! 🛐

கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள்
சகோதரன் புருஸ் ராப்சன்
+919703676184

1 கருத்து:

Unknown சொன்னது…

Amen we must to be unite and lift up our pray for nation.