சனி, 18 ஏப்ரல், 2020

காப்பாற்றும் கடவுளை அறிந்து கொள்ளுங்கள்

காப்பாற்றும் கடவுளை அறிந்து கொள்ளுங்கள்


சகோதரர்களே! சகோதரிகளே! நண்பர்களே! உற்றார் உறவினர்களே! இந்த உலகத்திலேயே எத்தனையோ கடவுள்கள்/தெய்வங்கள் இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு உண்மையான கடவுள் இருக்கிறார், அவர் நமக்கு அவருடைய வார்த்தைகளை தந்து இருக்கிறார், அதுதான் கிறிஸ்தவர்கள் கையிலே இருக்கிற பரிசுத்த வேத புத்தகம். கடவுள் தம்மை தடவியாகிலும் கண்டுபிடிக்கும்படி அவருடைய வேதத்தை மனுஷருடைய கைகளில் தந்திருக்கிறார். இயேசுவைக் குறித்து கிறிஸ்தவர்கள் உங்களுக்கு அறிவிக்கிறதின் நோக்கம், கொள்ளை நோய்களில் அகப்படாமலும் பரலோக வாழ்வை இழந்துபோகாமலும் இருக்கத்தான். ஏன் பரலோக வாழ்வு, பரலோக வாழ்வு இல்லையென்றால் என்ன நடக்கும். நரகம் என்று ஒரு இடம் இருக்கிறது அதிலே மாற்கு 9 :44. அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். இப்படியான வேதனை நிறைந்த இடத்திற்கு செல்ல வேண்டாமே என்கிற பாரத்தினாலே தான் கிறிஸ்தவர்கள் இயேசுவை குறித்து அறிவிக்கிறார்கள். பொதுவாக ஒரு கடையில் விலை குறைவாக நல்ல பொருள்கள் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அதை நமக்கு தெரிந்தவர்கள் அல்லது அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சொல்லுவோம் அல்லவா? அப்படிபோலவே நீங்கள் விலையேதும் செலுத்தவேண்டியில்லாத ஒன்றை குறித்து இலவசமாய் நீங்கள் இயேசுவின் மூலம் பரலோகம் செல்லலாம் என்று அதை உங்களுக்கு சொல்லவேண்டியது எவ்வளவு நிச்சயம்!

நான் சொன்ன இந்த சத்தியவேதத்திலே சொல்லப்பட்டிருக்கிற அடையாளங்கள் கர்த்தராகிய இயேசு மீண்டும் வருவதற்கு முன்னே நடந்துகொண்டிருக்கிற மற்றும் நடக்கப்போகிற காரியங்கள் குறித்தும் இப்பொழுது நாம் கண்கூடாக சில காரியங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோமே அந்த அடையாளங்களை கிறிஸ்தவர்கள் மாத்திரம் அறிந்து தப்பிகொண்டால் சுயநலம் கொண்டவர்களாக மாறிவிட கூடும். மாறாக நீங்களும் அதை அறியும்படிக்கு இந்த நேரத்திலே அதாவது உலகம் எதிர்கொண்டிருக்கும் இந்த மோசமான வைரஸின் தாக்குதலின் நேரத்தில் உங்களிடத்தில் சில உண்மையான காரியங்களை பகிர்ந்து கொள்ளலாம், ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், அல்லது கேள்விப்படாமல் இருப்பீர்களானால் தயவுசெய்து இதை சற்று கூர்ந்து கவனித்து இப்பொழுது நடக்குற இந்த கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மாத்திரமல்ல வேத வசனத்தில் சொல்லியிருக்கிற இதைவிட பல காரியங்கள் நடக்கப்போகிறவைககளில் இருந்து நாமும் நம் குடும்பமும் தப்பித்து கொள்ளும்படி குமாரனாகிய இயேசுவை அண்டி கொள்ளுங்கள். அந்த ஒரே ஒரு வழி மாத்திரம்தான் உண்டு நீங்கள் தப்பிக்கொள்ள வேறு வழி இல்லை. ஆகவே தயவுசெய்து நான் இங்கே காண்பிக்கிற வேத வசனங்களை சற்று ஆராய்ந்து பார்க்கும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். கடவுள் எல்லா மனிதரையும் நேசிக்கிற படியினாலும் உங்களை அன்புகூருகிறபடியினாலும் இதை உங்களுக்காக எழுதுகிறேன்.

தயவுசெய்து நீங்கள், இனி வரப்போகிற மகா கூடிய கொடிய வேதனைகளுக்கு தப்பித்துக் கொள்ளும்படி இதை கைக்கொள்ளுங்கள் நிச்சயம் இயேசுவாகிய தேவன் உங்களை நம்முடைய பிதாவாகிய யெகோவா தேவனிடம் கொண்டு போய் சேர்ப்பார். அதாவது ஒவ்வொரு மனிதனின் மரணத்திற்குப் பின்பு இருக்கிற வாழ்க்கை அதுதான் பரலோக வாழ்க்கை அதாவது வைகுண்ட வாழ்க்கை என்று சொல்கிறீர்களே உண்மையிலேயே இவைகள் உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் இயேசுவை அண்டிக் கொள்ளுங்கள். அது மாத்திரமல்ல இந்த நாட்களில் நடந்துகொண்டிருக்கிற பெரிய பாதிப்பாகிய கொரோனோ வைரஸ் மற்றும் இதன் பின்பு வரப்போகிற ஒரு பெரிய பஞ்ச காலம் ஏதோ ஒரு ஊரில் மட்டுமல்ல அல்லது ஒரு தேசத்தில் மட்டுமல்ல இந்த உலகம் முழுவதையும் ஆளுகை செய்யப்போகிற பஞ்சம். இந்த பஞ்சத்தினால் இப்பொழுது இருக்கிற செழிப்புகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போகும்! இந்த பஞ்ச காலத்திற்கு நீங்கள் தப்ப வேண்டுமானால் உயிரோடு இருக்கிற கடவுளின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிட்டால் மாத்திரமே விடுதலை பெற்றுகொள்ள முடியும். நீங்கள் கேட்கலாம் பல கிறிஸ்தவர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்களே! அவர்களை இயேசு விடுவிக்க வில்லையா? பரிசுத்த வேதம் சொல்லுகிறது உண்மையாய் அவரை தேடுகிறவர்களுக்கு கடவுள்(இயேசு) சமீபமாய் இருக்கிறார். உண்மையாய் தங்கள் இருதயத்தில் இருந்து தேடுகிறவர்களுக்கு மட்டுமே விடுதலை, அரவணைப்பு, பாதுகாப்பு! கிறிஸ்தவர்கள் என்கிற போர்வையில் இருந்து கொண்டு, சத்தியவேதம்; பாவம் என்று விலக்கினவைகளை செய்கிறவர்கள் அல்ல. ஆண்டவர் இயேசு உண்மையாய் கூப்பிடுகிற எந்த மனுஷனையும் விடுதலை ஆக்குவார்.

பைபிளில் இருந்து சில வசனத்தை காண்பிக்கிறேன், அதை சற்று கூர்ந்து கவனியுங்கள். லூக்கா எழுதின சுவிசேஷம் புத்தகம் 21ம் அதிகாரம் முழுவதும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மீண்டும் வருவதற்கு முன்னே சம்பவிக்க வேண்டியவைகளை சொல்லியிருக்கிறார்.

லூக்கா 21:11. பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.

25.சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.*

26. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.

இந்த வசனங்களிலே நாம் பார்க்கிற காரியங்களை சற்று நிதானித்து அறிந்து நாம் ஆராய வேண்டியதின் அவசியம் உண்டு. இதுநாள் வரைக்கும் உலகத்திலே அனேக கொள்ளை நோய்கள் வந்திருக்கிறது கொள்ளைநோய் என்றால் அதற்கு மருந்துகள் இல்லாதிருக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு அதற்கு மருந்து கண்டு பிடிப்பாங்க. அநேக வைரஸ்கள் இந்த உலகத்தை தாக்கியிருக்கிறது அதிலே பல ஆயிரங்களில் லட்சங்களில் அநேகர் மரித்து இருக்கிறார்கள். இதுநாள் வரைக்கும் வந்த வைரஸ்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருந்தது இப்பொழுது வந்து இருக்கிறதைப் பார்த்தால் எங்கிருந்து எப்படி தாக்கும் என்று தெரியவில்லை அதை கண்டுபிடிக்க கூட முடியவில்லை ஒரு காரியத்தை கண்டுபிடித்தால் புதிதாக மற்றொரு காரியம் வருகிறது. இதை வைத்து நாம் கவனித்தோமானால் கடவுள் மனுக்குலத்திற்கு ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறார் அந்த எச்சரிக்கையை நீங்கள் கவனித்து அவரிடத்தில் திரும்பினால், அவர் நிச்சயமாய் உங்களை விடுவிப்பார் இந்த உலகத்திலே நாம் இருக்கும்போது ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் அந்த ஆரோக்கியத்தை தருவதற்கு இயேசு என்கிற கடவுளால் மாத்திரமே முடியும். ஒருவேளை இந்த தொற்று நோயினால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருப்பீர்களானால், நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அதையெல்லாம் சற்று அப்புறம் வைத்துவிட்டு தயவு செய்து உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் இதை செய்யுங்களேன். இயேசுவே எனக்கு உதவி செய்யுங்க அப்படின்னு சொல்லுங்க! இயேசுவே என்னை காப்பாத்துங்கன்னு சொல்லுங்க!

உங்க வேதனையை வேற யாராலும் பங்கு போடவும் முடியாது! உங்க வேதனையை யாராலயும் புரிஞ்சிக்கவும் முடியாது! நீங்க பயப்படாமல் இயேசுவே என்று கொஞ்சம் தயவுசெய்து கூப்பிடுங்க இருதயத்திலிருந்து கூப்பிடுங்க இயேசு உங்கமேல மனமிறங்கி உங்களை விடுதலையாக்குவார். இயேசுவால் செய்யமுடியாத அற்புதங்களே இல்லை! ஆனால் அவர் உங்களுக்கு அற்புதம் செய்யவேண்டுமானால் நீங்கள் அவரை விசுவாசிக்க அதாவது நம்பிட வேண்டும்! இயேசு எனக்கு சுகம் அளிப்பார் என்று நீங்கள் உங்கள் இருதயத்தில் விசுவாசித்து சொல்லும் போது அவர் உங்களை நிச்சயமாக விடுவிப்பார். பிரியமானவர்களே! ஒரு விஷயம் கவனியுங்கள் அவரைத் தேடி வந்தவர்களை ஒருநாளும் அவர் கைவிட்டதில்லை! அவரை நோக்கி பார்த்தவர்களை அவர் ஒருநாளும் ஏமாற்றினதில்லை. அதினாலே இதை வாசிக்கிற நீங்களோ அல்லது உங்க குடும்பத்துல யாராவதோ பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது வைரஸ் தாக்கி விடுமோ என்று பயந்து கொண்டிருந்தாலோ தயவுசெய்து இயேசு கிட்ட கொஞ்சம் உங்க இருதயத்திலே இருந்து கேளுங்க எனக்கு இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு கொடுங்க விடுதலை குடுங்க! என்று சொல்லுங்கள்! இயேசு நிச்சயம் விடுவிப்பார்! அவருடைய அன்பு ரொம்ப பெருசு! அவருடைய கிருபை ரொம்ப பெருசு! நீங்க உங்க வழிபாட்டு காரியங்களெல்லாம் நினைத்து உங்க ஜீவனை இந்த உலகத்திலே இழந்து போகாதபடி உங்களை, நீங்களே இயேசுவைக் கூப்பிட்டு காப்பாற்றிக் கொள்ளுங்கள். நாம் யாவரும் இந்த உலகத்தில் வாழும்போது நன்றாய் ஆசிர்வாதமாய் இருக்கவும் அதேபோல் பரலோக வாழ்க்கையை பெற்றுக் கொள்ளவும் அழைக்கப்படுகிறோம். இவைகளை பெற்றுக்கொள்வதற்கு இயேசு ஒருவரே வழியாய் வாசலாய் ஜீவனாய் இருக்கிறார். அதே போல், உலகம் முழுவதும் வரப்போகிற பஞ்சத்தில் இருந்து நீங்கள் தப்பும்படி, இயேசுவே என்னையும் என் குடும்பத்தையும் இரட்சியும்! காப்பாற்றும் என்று சொல்லி கூப்பிடுங்கள்! நிச்சயம் ஒரு பெரிய வித்தியாசம் வரப்போகிறது, உண்மையாய் அவரை தேடுகிறவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பெரிய ஒரு வித்தியாசத்தை காண்பிக்க போகிறார்! அவரை தேடுகிறவர்களுக்கு பரிபூரண ஆசீர்வாதம் உண்டாயிருக்கும். இந்த வித்தியாசத்தை அநேக கண்கள் பார்க்கும். ஆகவே தயவுசெய்து அவரை அண்டிக்கொள்ளுங்கள்! உங்கள் இருதயத்தினால் அவரை நினைத்து கேளுங்கள்! நிச்சயம் இயேசு பரிபூரண ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிப்பார்.

அன்புடன் உங்கள் சகோ புரூஸ்
ஜெப உதவிக்கு
+91 70 100 68 654

சனி, 28 மார்ச், 2020

காதுள்ளவன் கேட்கக்கடவன் - கொரோனா

28.3.2020

கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக!

*ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்!*

சிலநாளைக்கு முன்பு (23.3.2020) உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் காரியத்தின் தாற்பரியத்தை அறியும்படி தேவனை நோக்கி பார்த்தபோது, கர்த்தர் சொன்ன காரியம் என்னவென்றால் சங்கீதம் 91:8. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, *துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.* தேவனுடைய உண்மையான பிள்ளைகளை தவிர மற்றவர்கள் தீவிரமாய் பாதிக்கப்படுகிற காரியத்தை வெளிப்படுத்தினார். நம் தேசத்தில் தீவிரமாய் பரவும் என்று வெளிப்படுத்தினார். லூக்கா 21:28. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், *நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.* லூக்கா 21:36. ஆகையால் *இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.* ஆகவே ஜெபியுங்கள் தேவனால் நிற்கப்பாத்திரவான்களாக மாறுங்கள்.

எசேக்கியேல் 9 :4. கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் *பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு* என்றார். எசேக்கியேல் 9:6. முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; *அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள்* என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள். வெளி 9 :4 *தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம்* சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. இவ்வசனங்களின்படி தேவன் ஒரு அடையாளத்தை ஜெபிக்கிறவர்களுக்கு போடுகிறதினால் அவர்கள் மாத்திரம் எவ்வித சேதமும் இல்லாமல் தப்ப முடியும்.

இந்த நாளின் (28.3.20) ஜெபவேளையின் ஜெபத்தில் தேவன் இடைப்பட்டு சொன்ன காரியம்! லூக்கா 21:26. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; *ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.*
II இராஜாக்கள் 6 :24,25 இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான். அதினால் சமாரியாவிலே *கொடிய பஞ்சமுண்டாயிற்று;* ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள். கொடிய பஞ்சங்களும் இன்னும் கற்பனைக்கு எட்டாத ஆபத்துகளும் தேசங்கள் யாவற்றின் மேலும் வருகிறது. தேவப்பிள்ளையே மவுனமாய் இராமல் பெருமூச்சுவிட்டு ஜெபி! உன் அரனை காத்துக்கொள்! தேவனை நோக்கி கதறு! தேவன் ஒருவரே இந்த காரியங்களில் இருந்து உன்னையும் உன் குடும்பத்தையும் தேசத்தையும் காக்க வல்லவர். வேறே கதியில்லை! புலம்பல் 2:18 அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே. எரேமியா 9:1 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன். அழுது புலம்பும் நேரமிது, கேளிக்கைகளை தவிர்த்துவிடு, தேவனை நோக்கி பார் அப்பொழுது பிழைப்பாய்!

*கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள்*
சகோ புரூஸ்
+91 70 100 68 654

===================================================

28.3.2020

Glory be to the Lord!

*"He who has an ear, let him hear what the Spirit says to the churches."'*

Few Days Ago (23.3.2020), When looked upon GOD the Most High! about corona virus, Lord our GOD Reveled according to Psalms - 91:8 Only with your eyes shall you look, *And see the reward of the wicked.* He revealed something that seriously affects all but the true children of God. He revealed that our nation will radically spread. Luke 21:28. Now when these things begin to happen, *look up and lift up your heads, because your redemption draws near."* Luke 21:36. Watch therefore, and pray always that you may be counted worthy to escape all these things that will come to pass, and to stand before the Son of Man." So Pray, then, and stand up for God.

Ezekiel 9: 4. and the LORD said to him, "Go through the midst of the city, through the midst of Jerusalem, and *put a mark on the foreheads of the men who sigh and cry* over all the abominations that are done within it." Ezekiel 9: 6. Utterly slay old and young men, maidens and little children and women; *but do not come near anyone on whom is the mark;* and begin at My sanctuary." So they began with the elders who were before the temple. Revelation 9: 4 They were commanded not to harm the grass of the earth, or any green thing, or any tree, *but only those men who do not have the seal of God on their foreheads.*

What God interceded in the prayer of this day (28.3.20)! Luke 21:26. *men's hearts failing them from fear and the expectation of those things which are coming on the earth,* for the powers of the heavens will be shaken. II Kings 6: 24,25 And it happened after this that Ben-Hadad king of Syria gathered all his army, and went up and besieged Samaria. And there *was a great famine* in Samaria; and indeed they besieged it until a donkey's head was sold for eighty shekels of silver, and one-fourth of a kab of dove droppings for five shekels of silver. Deadly famines and unimaginable dangers are mounting across nations. dear child of GOD do not be silent but cry! Guard your palace! Talk to God! God alone is able to protect you, your family and your nation from these things. No other ways! Lamentations 2:18 Their heart cried out to the Lord, "O wall of the daughter of Zion, *Let tears run down like a river day and night;* Give yourself no relief; Give your eyes no rest. Jeremiah 9:1 *Oh, that my head were waters, And my eyes a fountain of tears,* That I might weep day and night For the slain of the daughter of my people!

*Time to weep, avoid amusement, look to God and you will live!*

*Disciples of Christ Ministries (DCM)*
Brother Bruce
+91 70 100 68 654

வியாழன், 2 ஜனவரி, 2020

105 | Bro Bruce | என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்






104 | Bro Bruce | 2020 வாக்குத்தத்தம் | அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்;






103 | Bro Bruce | கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உப...