ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

ஓசன்னா


https://youtu.be/nfdp1QeY5t8

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! அன்பின் வாழ்த்துக்கள்! பிதாவாகிய தேவனுடைய அன்பும்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் பரிசுத்த ஆவியானவரின் அந்நியோன்னிய வழிநடத்தலும் பாதுகாப்பும் பராமரிப்பும் உங்கள் யாவரோடும் இருப்பதாக! ஆமென்! கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்களிலிருந்து உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த நாளின் தியானத்திற்கு என்று பரிசுத்த அப்போஸ்தலனாகிய யோவான் எழுதின சுவிசேஷம் புத்தகம் 12:13  குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு அவருக்கு எதிர் கொண்டு போகும்படி புறப்பட்டு ஓசன்னா! கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்! இந்த வசனம் வாசிக்கும்போது ஓசன்னா! என்று சொல்லி ஜனங்கள் எல்லாரும் சொல்லுகிறதை பார்க்க முடியும் ஓசன்னா என்றால் இரட்சித்தருளும் இப்பொழுதே இரட்சித்தருளும் என்று பொருள், கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அநேக அற்புதங்களைச் செய்து இருந்தார் இந்த காரியம் குறிப்பாக லாசருவை உயிரோடு எழுதின பின்பு மரித்துப் போய் நான்கு நாளாய் கல்லறையில் வைக்கப்பட்ட பின்பு லாசருவே வெளியே வா என்று சொல்லி அவனை கூப்பிட்டு உயிரோடு எழுப்பினார் கர்த்தராகிய இயேசு!அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஜனங்கள் ஆர்ப்பரித்து அவரை வரவேற்கிறார்கள். யோவான்12:12  சொல்லுகிறது மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, எருசலேம் தான் அவர்களுக்கு முக்கியமான இடம் எல்லா தேசங்களிலுமிருந்து எருசலேமுக்கு வருவார்கள் அந்த நாட்களிலே பண்டிகை என்று வரும் போது அவர்கள் எல்லாரும் கூடி வருகிற பழக்கம் இருந்தது அப்போது இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட இயேசுவை விசுவாசிக்கிற ஒரு கூட்டமும் வந்தது ஆமென்! அந்தக் கூட்டம் என்ன செய்கிறது குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு அவருக்கு எதிர் கொண்டு போகும்படி புறப்பட்டார்கள் ஆனால் பாருங்கள்  இது ஏதோ ஒரு சாதாரண காரியம் ஆக இது நடக்கவில்லை அல்லது ஏதோ ஒரு எதேச்சையான ஒரு காரியமாக அது நடக்கவில்லை மாறாக சீயோன் குமாரத்தியே பயப்படாதே உன் ராஜா கழுதை குட்டி என் மேல் வருகிறார் என்று எழுதி இருக்கிற பிரகாரமாக இது ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் ஆக நடக்கிறது. பிரியமானவர்களே! சகரியா தீர்க்கதரிசியின் புத்தகம் 9:9 வசனத்தில் சொல்லப்பட்ட படி சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். ஆமென்! பாருங்கள்  இது ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக சம்பவித்த காரியம்.  

கர்த்தராகிய இயேசு தன்னைக் குறித்து எழுதப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் மீது மிகுந்த கவனம் உள்ளவராய் அது செயல்படுகிறதற்கு ஒப்புக்கொடுத்தவராய்  இருந்தார் யோவான் ஒரு முக்கிய முக்கியமான ஒரு காரியத்தைச் சொல்லுகிறார் என்ன சொல்லுகிறார்? இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்தில் அறியவில்லை இவைகளை யோவான் 12:15 வசனத்தில் சொல்கிறார் இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன் மேல் ஏறிப்  போனார்  அப்போது இந்த காரியங்களையும் முதலாவது அவருடைய சீஷர்கள் அறியாதிருந்தார்கள் ஆனால் இயேசு மகிமை அடைந்த பின்பு இப்படி அவரைக் குறித்து எழுதி இருப்பதையும் தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள் ஆமென் அல்லேலூயா மாற்கு 11:2  வசனத்திலிருந்து  வாசித்தோமானால் அங்கேயும் இயேசு பவனி சென்றது எழுதப்பட்டிருக்கிறது இதில் மிகத் தெளிவாக கழுதை எங்கே இருந்து கொண்டுவரப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது மாற்கு 11:4 வது வசனம் சொல்கிறது இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்த குட்டியை கண்டு அவிழ்த்தார்கள். குட்டி அவிழ்க்கப்படும்போது அங்கே நின்றவர்கள் ஏன் அவிழ்க்கிறீர்கள்  என்று கேட்டார்கள் இயேசு அவர்களுக்கு கற்பித்தபடியே உத்தரவு சொன்னார்கள் இயேசு  என்ன கற்பித்தார் மாற்கு 11:2வது வசனத்தில் பார்த்தோமானால் உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள் அதில் பிரவேசித்த உடனே மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள் அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால் இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள் உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பி விடுவான் என்று சொல்லி அவர்களை அனுப்பினார் பார்க்கிறோம் அந்த கழுதைனுடைய நிலை என்னவாக இருக்கிறது அது கட்டப்பட்டு இருக்கிறது ஆண்டவர் பவனி வருவதற்கு கட்டில் இருக்குற ஒரு கழுதையை விடுதலையாகி கொண்டுவரச் சொன்னார் அவர் இன்றைக்கு உங்கள் மீதும் பவனி செய்ய விரும்புகிறார் நீங்கள் அவரைக் சுமந்து செல்ல விரும்புகிறீர்களா கழுதைக்கு மரியாதை அல்ல அதன்மேல் ஏறி அமர்ந்து இருக்கும் ராஜாவுக்கு மரியாதை இன்றைக்கும் ஒரு கழுதையைப் போல நீங்களும் இயேசுவை சுமக்க ஆயத்தமா? அன்றைக்கு சுமந்த அந்த கழுதையை ஒவ்வொரு வருடமும் எல்லா சபையினரும் நினைவு கூறுகிறார்களே நீங்களும் இயேசுவை சுமந்தீர்களானால் எப்பொழுதும் நினைவு கூறப்படுவீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். கர்த்தருடைய கிருபை உங்களோடு நிச்சயமாய் இருக்கும் அந்தக் கழுதை எங்கே போவது என்று தெரியாமல் இரு வழிகளில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது மரணமும் ஜீவனும் இரண்டு அதிகாரமும் உடைய இரண்டு தன்மைகளையுடைய ராஜ்யங்கள் உண்டு ஒன்று வலப்பக்கம் மற்றொன்று இடப்பக்கம் ஆண்டவராகிய இயேசு இரண்டு பக்கமாக ஆட்டுக் குட்டிகளைப் பிரித்து வைத்திருக்கிறதை பார்க்கிறோம். வலப்பக்கத்தில் ஒரு கூட்டத்தையும் இடப்பக்கத்தில் ஒரு கூட்டத்தையும் அப்படியானால் ஒரு பக்கத்தின் கூட்டம் தேவனுக்கு பிரியமாய் நடக்க விரும்புகிற கூட்டம் ஒரு பக்கத்தின் கூட்டம் உலக லவ்கீக கவலைகளினால் அழுத்தப்படுகிற கூட்டம் நீங்கள் எதில் இருக்க விரும்புகிறீர்கள் இயேசு விரும்புகிறபடி அவரை சுமந்து செல்லுகிற கூட்டத்தில் இருக்கப் போகிறீர்களா அல்லது இந்த உலகத்தின் பார்வையில் விலையேறப்பெற்றதாயிருக்கிற   கிரியைகளுக்கு உங்களை ஒப்புக்கொடுக்க போகிறீர்களா நிதானித்து அறியுங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்கள்  தேவ சித்தமா? அல்லது உலக உலகத்தின் இச்சைகளா? அல்லது உலகத்தின் தேவைகளை தெரிந்து கொள்ளப் போகிறீர்களா? ஜீவனையா? அல்லது மரணத்தையா? இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மாத்திரமே இரட்சிப்பு  உண்டு. இந்த உலகத்தில் அனேக கர்த்தாக்கள் உண்டு இந்த உலகத்தில் தங்களை தெய்வங்கள் என்று சொல்லுகிறவர்கள் அநேகம் உண்டு ஆனால் கிறிஸ்து ஒருவரே மெய்யான வழியாய் பிதாவினிடத்தில் போகக் கூடிய ஒரே வாசலாய் அவர் இருக்கிறார் எதைத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? பிரியமானவர்களே இந்த நாளில் உங்களை ஒப்பு கொடுப்பீர்களா தேவ சித்தம் செய்ய வேண்டும் என்கிற ஏக்கம் உங்களுக்குள் பெருகட்டும் மாற்கு 11:7ல் வாசிக்கிறோம் அவர்கள் அந்த குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டு வந்து அதன் மேல் தங்கள் வஸ்திரங்களை போட்டார்கள் அவர் அதன் மேல் ஏறி போனார். அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியில் விரித்தார்கள் வேறு சிலர் மரக்கிளைகளை தரித்து வழியிலே பரப்பினார்கள் முன்நடப்பாரும் பின்நடப்பாரும்அதாவது இயேசுவுக்கு முன்னாடி வழியில் நடந்தவர்களும் சரி பின்னாடி நடந்தவர்களும் சரி அந்த மணி நேரத்திலே ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக உன்னதத்தில் ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் அல்லேலூயா!

ஆண்டவரை அன்றைக்கு இரட்சிக்கும்படி கூப்பிட்ட அந்த ஜனங்களை போல நீங்களும்  இந்த நேரத்திலே கூப்பிடுவவீர்களா அப்படி அவரை நோக்கி கூப்பிடும் போது அவர் நிச்சயமாகவே உங்களை விடுவிப்பார். உங்களுடைய பிரச்சனை பெரிதாக இருக்கலாம்! உங்கள் போராட்டங்கள் பெரிதாக இருக்கலாம்! ஒருவேளை நீங்கள் கண்ணீரோடு இருக்கலாம்! உங்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லையே என்று இருக்கலாம்! இந்த நேரத்தில் இயேசு உங்களுக்காக வருகிறார் பிரியமானவர்களே நீங்கள் அவரை நோக்கி பார்த்து ஓசன்னா என்று சொல்லி நீங்கள் அவரை நோக்கி பார்க்கும் போது அவர் நிச்சயமாகவே உங்களை விடுவிக்க வல்லவராகவே இருக்கிறார். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று சொல்லி நம்ம ஊர்ல ஒரு பழமொழி உண்டு வேத வசனம் சொல்லுகிறது உன் வாயை விரிவாய் திற அதை  நன்மையினால் நிரப்புவேன் ஆண்டவர் உங்களை நன்மையினால் நிரப்ப விரும்புகிறார் ஆனால் நீங்கள் கேட்கும்போது மட்டுமே. அவரிடத்தில் கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான் ஆமென்! ஆண்டவரை அன்றைக்கு ஆராதித்த ஆர்ப்பரித்த ஜனங்கள் உண்டு. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாளில் ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரிக்க போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள் ஒருமனப்பட்டு நாம் அவரை ஆராதிப்போம் அவரை இருதயத்தில் கூப்பிடுவோம் ஆண்டவரே என்னுடைய நிலைகளை அறிந்து இருக்கிறவரே எனக்கு உதவிசெய்யும் என்று சொல்வோமா? இப்படி நாம் சொல்லும்போது அவர் நிச்சயமாகவே நமக்கு செவிகொடுக்க வல்லவராய் இருக்கிறார் ஆமென்! ஆமென்! ஆமென்!

ஜெபிப்போம்! கிருபை நிறைந்த நல்ல ஆண்டவரே நாங்கள் பார்த்தபடி அந்த நாளில்  நீர் இந்த உலகத்தில் வாழ்ந்த போது அப்பா உம்மை முன் நடப்பார் பின்னரும் ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தது போலவே நாங்களும் ஆர்ப்பரிக்க உம்முடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ள கிருபை தாரும் இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்! ஆமென்! ஆமென்! 

கிருபையும் சத்தியமும் தேவ தயவும் உங்களில் ஆளுகை செய்து பெருகுவதாக ஆமென்! ஆமென்! ஆமென்!

கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள்
உங்கள் சகோதரன் புரூஸ்
+91 970 36 76 184

சனி, 13 ஏப்ரல், 2019

அப்போஸ்தலர்கள்



அழைக்கப்பட்டவர்கள்

அப்போஸ்தலர்கள் என்றால் யார்? முதலாவதாக அவர்கள் அழைக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். அழைக்கப்பட்டவர்கள் என்று சொல்லும்போது இயேசு கிறிஸ்து ஒவ்வொருவரையும் தெரிந்துகொண்டு அவர்களைத் தனித்தனியே அழைத்ததை பார்க்க முடியும். அப்படி அவர்கள் அழைக்கப்பட்ட பின்பு அவர்கள் தாங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்களோ அதை எல்லாம் விட்டு கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்தை நிறைவேற்ற அவரோடு நடக்க வந்தார்கள். இயேசு எந்த ஊழியத்தை செய்தார்?  ஜனங்களை பாவத்திலிருந்து விடுதலை  ஆக்கி சத்திய வார்த்தைகளை போதித்து அவர்களை நல்வழிப்படுத்தும்படி, அது மாத்திரமல்ல அவர்களுடைய வியாதியிலிருந்து சுகம் கொடுத்து பிசாசின் பிடியில் இருந்து அவர்களை விடுதலையாகி அவர்கள் இரட்சித்தார். அப்படியானால் ஒரு  அப்போஸ்தலரின் வேலை இயேசு செய்த படியே ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவித்து பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் வந்திருக்கிறது என்று சொல்லி ஜனங்களை பாவத்திலிருந்தும் அக்கிராமத்திலிருந்தும் விடுவித்து பிணியாளிகள் சுகமாக்கி அவர்களை தேவனுக்கு நேரே  நடத்துகிறவர்களாய் இருக்க வேண்டும்.

*மற்றும் ஒரு அழைப்பு*

லூக்கா 10 வது அதிகாரம் 1 வசனம் இப்படியாக சொல்கிறது இவைகளுக்குப்பின்பு கர்த்தர் வேறு 70 பேரை நியமித்து தாம் போகும் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை தமக்கு முன்னே இரண்டு இரண்டு பேராக அனுப்பினார்
இந்த இடத்திலே இவர்களைக் குறித்து பார்க்கும்போது இவர்கள் எதையும் விட்டு வந்தவர்கள் என்று சொல்லப்படவில்லை மாறாக இவர்களை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் இவர்கள் தங்கள் குடும்பத்தாரோடு கூட இணைந்து தேவனுடைய வார்த்தையை சொன்னவர்கள் ஆக எடுத்துக் கொள்ளலாம் முதலிலேயே பார்த்தோம் ஆண்டவர் தெரிந்துகொண்டு அழைக்கிறார் அழைக்கப்பட்டவர்கள் எல்லாவற்றையும் செய்து இருந்த வேலையை முதற்கொண்டு விட்டு வந்தவர்கள். கர்த்தராகிய இயேசுவை பின்பற்றியவர்க்களில் சிலரை அதாவது அவர்களில் 70 பேரை கர்த்தர் தெரிந்து கொள்கிறார். வேதத்தில் அநேக இடங்களில் பார்க்கிறோம் அவரை தொடர்ந்து பின்பற்றி வந்தவர்கள் அநேகம் இருந்தார்கள். அவர்களில் இருக்கிற சிலரை ஆண்டவர் வேறு பிரித்து அவர்களை தெரிந்து  கொள்ளுகிறார். அழைக்கப்பட்டவர்கள் அநேகர் இருந்தார்கள் வேறு சிலர் ஆண்டவரைப் பின்பற்றி வந்தார்கள் ஆனால் தேவன் சிலரை தெரிந்துகொண்டது மாத்திரமல்ல, அவர்களுக்கு தன்னுடைய ஊழியத்தை பற்றி நன்கு கற்று கொடுக்கிறார் *தேவனிடத்தில் கற்றுக்கொள்கிறார்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்* மத்தேயு 11:29. பிரியமானவர்களே! நீங்கள் யாரிடத்தில் கற்றுக் கொள்கிறீர்கள்? மனிதர்களிடத்தில் கற்று கொள்கிறீர்களோ? அல்லது தேவனிடத்திலா? தேவனிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் அது ஒரு நாளும் தோற்றுப் போகிறது இல்லை அவர் நம்மை பெலப்படுத்தி அவருடைய காரியத்தைச் செய்வதற்கு கிருபை அளிக்கிறார் ஆமென்! அல்லேலூயா!
     
தேவனிடத்தில் அதிகாரம் பெற்றவர்கள்

தேவன் அழைக்கிறது மாத்திரமல்ல தெரிந்து கொள்ளுங்கிறது மாத்திரமல்ல தம்முடைய வரங்களினால் அவர்களை நிரப்பவும் செய்கிறார் அதிகாரம் கொடுக்கிறார். பிசாசின் மேல் அதிகாரம் கொடுக்கிறார். பிசாசை துரத்தும் அதிகாரம் கொடுக்கிறார். அது மட்டுமல்ல வியாதியஸ்தர் சுகமாக்குகிற வல்லமை எப்பேர்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் அவன் சுகம் ஆக்கப்படுகிறான் அது மட்டுமல்ல அற்புதங்களை செய்கிற சக்திகள் உடையவர்களாய் அப்போஸ்தலர்கள் இருக்கிறார்கள்.
நம்முடைய தேசத்திற்கு வந்த அப்போஸ்தலனாகிய தோமா குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொல்லப்பட்ட சில காரியங்களை சொல்லுகிறேன். தோமா அவர்கள் அரபிக் கடலோரம் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது அங்கே சிலர் சூரிய வணக்கத்தைக் செய்கிறதை பார்த்தார். அந்த சூரிய வணக்கம் செய்யும் போது என்ன செய்தார்கள் தண்ணீரை கைகளில் கோரி வானத்துக்கு நேரே விட்டார்கள். மறுபடியும் அந்த தண்ணீர் தன் இடத்திற்கு வந்து சேர்ந்தது தோமா ஒன்று  சொன்னார் நீங்கள் தண்ணீரை யாருக்கு அர்ப்பணிக்கிறார்கள் என்று கேட்டார் அவர்கள் நாங்கள் வணங்கும் இந்த சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு தோமா கடவுளுக்கு கொடுக்கப்பட்டதானால் ஏன் கடவுள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கேட்டார். அதேபோல் கடவுள் ஏற்றுக் கொண்டால் தண்ணீரில் பள்ளம் உண்டாகும் அல்லவா என்று சொன்னார். அதைக் கேட்ட ஜனங்கள் அது எப்படி சாத்தியம் என்று கேட்டார்கள். அதற்கு தோமா நான் வணங்குகிற உண்மையான கடவுள் அதை செய்ய சாத்தியம் உள்ளவராயிருக்கிறார் என்று சொன்னார் அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டார்கள் எங்கே அதை செய்து காட்டுவோம் என்று சொன்னார்கள் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் உள்ளவராய் விசுவாசத்தில் நிறைந்தவராய் அந்த தண்ணீரைக் கோரி வானத்தில் விட்டார் தண்ணீர் வானத்தில் நின்று விட்டது. தண்ணீர் கோரின இடம் பள்ளம் ஆகிவிட்டது இதைப் பார்த்து அங்கிருந்த அநேகர் இயேசு தான் உண்மையான ஆண்டவர், இயேசு தான் உண்மையான தெய்வம் என்று அவரைச் சேர்ந்து கொண்டார்கள். இப்படி அற்புதங்கள் மூலம் ஜனங்களை தேவனுக்கு நேர திருப்பக்கூடிய வல்லமை படைத்தவர்களாய் இருக்கிறார்கள். அதனாலதான் அப்போஸ்தலர்களுக்கு தேவன் அற்புதங்களைச் செய்யும் கிருபைகளை தருகிறார் ஆமென்!
அப்போஸ்தலன் என்பவன் தேவனை மட்டும்  உயர்த்துகிறவனாய் இழக்கிறான் அவன் தேவனையே காட்டித் தருகிறான் தன்னை எல்லா இடத்திலும் தாழ்த்துகிறான்

இயேசுவை தரிசித்தவர்கள்

அப்போஸ்தலர் இயேசுவை தரித்தவர்களாய் இருக்கிறார்கள் இன்றைக்கும் அநேகருக்கு இயேசு தரிசனம் ஆகியிருக்கிறார் இயேசுவை தரிசித்த பின் ஒரு நாளும் சும்மா இருப்பதில்லை அவர்கள் எழும்பி தேவனை அறிவிக்கிறவர்களாக அவருடைய ராஜ்யத்தை  பறைசாற்றுகின்றவர்களாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சமீபத்திலே நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த சாதுசுந்தர்சிங் ஐயா அவர்கள் அவர்கள் தேவனை தரிசித்த பின்பு அதாவது இயேசுவை தரிசித்த பின்பு உலகமெங்கும் போய் இயேசுவுக்காக சாட்சியாய் வாழ்ந்தது மட்டுமல்ல இந்தியாவின் அப்போஸ்தலன் என்று சொல்லக்கூடிய நிலையிலேயே காரியங்களைச் செய்தார்கள் அதேபோல சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் கர்த்தராகிய இயேசுவை தரிசித்த பின்பு ஆண்டவரின் கண்களை கண்ட பின்பு அந்த கண்களில் கண்ணீரை கண்ட பின்பு பீகாருக்கு சென்று அநேக இடங்களில் தேவனை குறித்து சாட்சி விட்டு இன்றைக்கு அவரிடத்திலே அவரோடு கூட 2800 மிஷனரிகள் பணி செய்யக்கூடிய ஒரு ஊழியத்தை உருவாக்க தேவன் கிருபை தந்தார்  இவரும் கர்த்தருடைய அப்போஸ்தலரே.  சிலர் சொல்வார்கள் பைபிள் காலத்தோட அப்போஸ்தலர்கள் எல்லாம் முடிச்சிட்டாங்க அப்படி அல்ல பிரியமானவர்களே, கிறிஸ்துவின் வருகை பரியந்தம் எபேசியர் புஸ்தகம் தெளிவாக சொல்லுகிறது ஐந்து ஊழியங்கள் சபையில் இருக்கும் ஆமென்! எபேசியர் 4:12,13 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,  அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
அப்படியானால் கிறிஸ்துவின் வருகை பரியந்தம் இந்த ஐந்து ஊழியங்களும் சபையில் இருந்து தான் ஆக வேண்டும் ஆமென்

சபை ஸ்தாபிப்பு

அப்போஸ்தலர்கள் ஒரு காரியத்தைச் செய்வதை பார்க்க முடியும். அப்போஸ்தலர்கள் தாங்கள் போகிற இடங்களிலெல்லாம் சபையை உருவாக்கினார்கள். உருவாக்கியது மட்டுமல்ல அங்கே தகுதியான மனிதர்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கு சீஷத்துவ பணியை தந்து அவர்களை சபைக்கு உத்தர வாதிகளாக அதாவது போதகர்களாக அந்த நபருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கிருபையின் அடிப்படையிலே அந்த நபரை தேவன் வைத்திருக்கிற அழைப்பின் அடிப்படையில் அவர்களை சபைக்கு தலையாக நியமித்து வைத்து பின்பு கடந்து போவார்கள் அது மாத்திரமல்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தாங்கள் நிர்வகித்த சபைக்கு வந்து அந்த சபையை பராமரித்து சூழ்நிலைகளை அறிந்து திடப்படுத்துவார்கள்.  அது மட்டுமல்ல சீஷர்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள் உருவாக்கப்பட்ட சீசன் போய் மற்றும் அநேக சீஷர்களை உருவாக்குவான். இப்படிப்பட்ட நோக்கத்தையே அப்போஸ்தலர்கள் கொண்டிருந்தார்கள் அவர்கள் போகிற இடங்களிலெல்லாம் சபை உருவாக்கப்பட்டது சபைக்கு தேவையான காரியங்களையும் அவர்கள் கவனித்தார்கள் சபையிலே வளரும்படிக்கும் உபத்திரவத்தில் பொறுமையாய் இருக்கும்படிக்கும் சபைக்கு கற்றுத் தந்தார்கள் கொடிய தரித்திரத்திலும் கூட உதாரத்துவமான கொடுக்கக் கூடிய நிலையில் இருந்தது சபை, ஏழைகளை விசாரிக்கிற தன்மை சபையில் உண்டாக்கப்பட்டு இருந்தது. விதவைகளை பராமரிக்க கூடிய நிலைகள் இருந்தது. சபை அனுப்பப்பட்டவர்களாகிய சீஷர்களை ஜெபத்தினாலும் பொருளுதவியினாலும் தாங்கியது இப்படிப்பட்ட சபையாய் இருக்க தேவன் உங்களையும்  அழைக்கிறார். ஆமென்!

உபத்திரவத்தில் பொறுமை

அதீதமான தேவனுடைய கிருபைகளை கொண்டிருந்தாலும், தேவனுடைய தன்மைகளை தங்கள் இடத்திலேயே வைத்துக்கொண்டிருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் பொறுமை இழக்காதவர்களாய் தாழ்மையோடு எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துகிறவர்களாய், மரணம் ஏற்படுகிறதாய் இருந்தாலும் அதைக் குறித்து பயப்படாதவர்களாய் ஆண்டவரிடத்தில் போகப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு வாழ்ந்தவர்கள் உபத்திரவத்தை குறித்து பயப்படாமல் இருந்தார்கள் எந்நேரமும் அடிக்கப்படுகிற ஆடுகளைப் போல் இருக்கிறோம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறதை பார்க்க முடியும். மரணம் வரும் என்று  நிச்சயித்து இருந்தார்கள். மரணத்தைக் குறித்து ஒரு நாளும் பயப்பட்டதே இல்லை. தேவனுடைய ராஜ்யத்தை குறித்ததான ஏக்கம் நிறைந்தவர்களாய் மாத்திரம் இருந்தார்கள் கிறிஸ்துவை அறிவிக்கிறதினால் மரித்துப்போவோம் என்று இருந்தாலும் அதைக் குறித்து பயப்படவே இல்லை. அநேக மிஷனரிகளின் சாட்சி இப்படிச் சொல்கிறது நர மாமிசம் சாப்பிடுகிறவர்கள் மத்தியில் போய் அங்கே மரித்தாலும் பரவாயில்லை என்று தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அப்படி அவர்கள் செய்ததினாலே அநேகர் இன்று கர்த்தரை ஆராதிக்கிறார்கள் நம்முடைய தேசம் கர்த்தரை அறியாது இருந்த போதும் அநேக மிஷனரிகள் இங்கே புறப்பட்டு வந்து ஒருமுறை தானும் தன்னுடைய சொந்த தேசத்திற்கு திரும்பிப் போக மனது இல்லாதவர்களாய் நம்முடைய தேசத்திலேயே அவர்களுடைய கல்லறை இன்றும் இருக்கிறது பிரியமானவர்களே! இப்படி தேசம் விட்டு தேசம் வந்து தங்கள் ஜீவனையும் கொடுத்த அப்போஸ்தலர்கள் அநேகர் உண்டு, நம்மிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அனேக பகுதிகளிலேயே அப்போஸ்தல ஊழியத்தை செய்கிறவர்கள் உண்டு தேவன் உங்களை அழைப்பார் என்றால் பயப்படாதீர்கள் உங்களை ஒப்புக்கொடுங்கள் கர்த்தருக்கென்று எழும்பி அவருடைய ஊழியத்தை செய்யுங்கள் சபையில் மாத்திரமா ஊழியம்? நல்லதுதான் சபை ஊழியம் நிச்சயம் அவசியம் அது இல்லை என்றால் விசுவாசிகள் சீஷர்களாய் மாறுவது கடினமே சபையும் அவசியம் சபை எழும்பி அநேகரை மிஷனரிகளாக அப்போஸ்தலர்கள் ஆக அனுப்ப வேண்டியதன் அவசியம் உண்டு. அதை மறவாது செயல்படுத்த வேண்டும். கர்த்தருடைய ஊழியக்காரரே இன்றைக்கு ஒரு உத்திரவாதம் செய்வோமா தேவ ஜனங்களே இன்றைக்கு ஒரு உத்தரவாதம் செய்வோமா ஆதிசபை செய்ததுபோல் மரணம் நேரிடுகிறதாய் இருந்தாலும் அதை குறித்து பயப்படாமல் தேதியை அறிவிக்க  எலும்புவாயா? தேவ சத்தம் கேட்டும் இன்னும் காலம் போகட்டும் என்று சொல்வாயோ தேவனுடைய இருதயத்தை தன் வேதனையை அறியமாட்டாயோ? எழும்பு! எழும்பு! சபையே தேவனுடைய ராஜ்யத்தை கட்டுகிறவர்கள் எலும்பு  ஆண்டவரை அறியாதவர்கள் அநேகர் உண்டு, அறிந்திருக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் உண்மையாய் இல்லாததனால் அல்லவா இன்றும் நம் தேசம் கர்த்தரை அறியவில்லை இன்றைக்கு ஒரு தீர்மானத்தோடு நான் எழும்பி தேவனுடைய ராஜ்யத்தை கட்டப்படும் என்று சொல்வாயோ? உன்னை தான் தேவன் தேடுகிறார் உன்னை ஒப்புக் கொள்கிறாயா? உன்னோடு பேசவும் உன்னை எழுப்பவும் தேவன் விரும்புகிறார் உன்னை அர்ப்பணிக்கிறாயா? இன்றே அர்ப்பணிப்போம் தேவனுடைய பாரத்தை பெற்றுக்கொள்வோம் தேவ சித்தம் நிறைவேற்றுவோம்.

கிருபை யாவரிலும் பெருகுவதாக!
தேவ சமாதானம் உங்களை ஆளுகை செய்வதாக! தேவன், நீங்கள் தன்னை அறியும் அறிவை உங்களுக்கு அதிகமாய் தந்தருள்வாராக!
அல்லேலுயா! ஆமென்! ஆமென்! ஆமென்!

கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள்
உங்கள் சகோதரன் புரூஸ்

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

36 | Bro Bruce | நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ண...

மத்தேயு 26 : 41. நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

திங்கள், 8 ஏப்ரல், 2019