புதன், 4 செப்டம்பர், 2019

இயேசுவே வழி

யோவான் 14: 6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.  


பிரியமானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்! இன்றைக்கு அநேகர் மரணத்திற்குபின் எங்கே போவோம் என்று அறியாமல் இருக்கிறார்கள். சத்திய வேதமாகிய பைபிள் சொல்லுகிறது, அவரவர் கிரியைக்கு தக்க பலனை தேவன் அவர்கள் மரணத்திற்கு பின் தருகிறார். ஆனாலும் ஒரு நற்செய்தி உண்டு அதுஎன்னவென்றால் கர்த்தராகிய இயேசுவை அறிந்து அவரை விசுவாசித்து அவரை பின்பற்றுகிறவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை யோவான் 3:18 அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாத வனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால்,  அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.  

இயேசு சொல்லுகிறார் யோவான் 14:6“அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”. இயேசு கிறிஸ்துவே வழியாய் பரலோகத்திற்கு அதாவது சிவலோகபதிவி அல்லது வைகுண்டபதவி  என்கிற நிலைக்கு இந்த உலகின் வாழ்வுக்கு பின் எந்த மனிதனையும் கொண்டுபோகிறவாராய் இருக்கிறார்ஏனென்றால் இவர் ஒருவரே மனிதனுக்காக தன் ஜீவனையும் தன் சரீரத்தையும் கல்வாரி சிலுவையிலே பலியாக செலுத்தினார் ஆமென்இவருடைய இரத்தம் பாவமில்லாமல் இந்த உலகத்தில் உள்ள யாவருக்காகவும் சிந்தப்பட்டதுஅந்த இரத்தத்தினால் நீங்கள் கழுவப்படும்போது எந்தவிதமான அல்லது எப்பேர்ப்பட்ட பாவமும் கழுவப்படுகிறது 

நீங்கள் வெளியே சொல்லக்கூடாத பாவத்தினால் தவித்து கொண்டிருந்தால் அதையும் உங்களை விட்டு நீக்குகிற வல்லமை கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்திற்கு உண்டு. அதனால் நீங்கள் ஆட்டையோ, கோழியையோ அல்லது மாட்டையோ அல்லது வேறே எந்த       மிருக ஜீவனையோ பலியாக எந்த இடத்திலும் அல்லது கடவுளுக்கும் முன் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை, அப்படி செலுத்தப்படும் பலியினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்குமானால் இன்னும் உங்கள் பிரச்சனைகள் போராட்டங்களில் மாற்றம் உண்டா என்பதை சிந்தித்து பாருங்கள்.  

ஆகையால் நீங்கள் செலுத்த நினைக்கின்ற பலியை கர்த்தராகிய இயேசு  கிறிஸ்து உங்களுக்காக செலுத்திவிட்டார். மனிதன் செய்த தவறுக்கு இயேசு கிறிஸ்து ஒரு மனிதனாக அவதரித்து தன்னையே நமக்காக பலியிட்டார். அந்த பலியினாலே மீட்க்கப்படுகிறோம், விடுவிக்கப் படுகிறோம் ஆமென்!  அவர் உங்களுக்கு வழியாய் மாத்திரமல்ல அவரே சத்தியமாய் அதாவது உண்மையாய்/நிஜமாய் இருக்கிறார். அது மாத்திரமல்ல அவரே ஜீவனுள்ளவராய் இருக்கிறார்,  

அதாவது எப்பொழுதும் உயிரோடு இருக்கிறார் ஆமென்! அவர் கல்வாரியில் மரித்தது மட்டுமல்ல அவர் அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இன்றைக்கும் ஜீவனுள்ளவராக நீங்கள் அவரை நோக்கி உங்கள் பிரச்சனைகளை, போராட்டங்களை, தேவைகளை சொல்லுவீர்களானால் அவர் இரக்கம் உள்ளவராக உங்களுக்கு பதில் கொடுக்கிறவராகவே இருக்கிறார்.  

உங்கள் வியாதியோ, கண்ணீரின் வாழ்வோ, பில்லிசூனிய பிரச்சனையோ, பிசாசின் போராட்டமோ, மரண பயமோ, குடும்பத்தில் குழப்பமோ, சமாதான குறைவோ எதுவாயிருந்தாலும் இயேசு கிறிஸ்து உங்களுக்கு  விடுதலை கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். இன்றே அவரை உங்கள் சொந்த இரட்ச்சகராக ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியானால் பின்வருமாறு சொல்லுங்கள் இயேசு உங்களை தொட்டு விடுதலையாக்குவார் ஆமென்!  

ஜெபம்! பரலோக பிதாவேகர்த்தராகிய இயேசுவை உம்முடைய குமாரனாக  ஏற்று கொண்டு அவரால் எங்களுக்கு இரட்சிப்பு உண்டு என்று விசுவாசிக்கிறோம்நீரே பரலோகம் செல்லும் வழி என்பதை விசுவாசிக்கிறோம்நீர் எங்களுக்காய் இரத்தம் சிந்தினீர் என்று விசுவாசிக்கிறோம்உம் இரத்தத்தால் கழுவப்பட எங்களை ஒப்புக்கொடுக்கிறோம்! (உங்கள் தேவைவைகளை இந்த ஜெபநேரத்தில்  சொல்லுங்கள்இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் பிதாவே ஆமென் 

அனுப்பப்பட்டவன் 
சகோ புரூஸ் 
கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள்
+91 970 36 76 184