வியாழன், 23 நவம்பர், 2017

கர்த்தரை பரிசுத்தம்பண்ணுங்கள் - Sanctify the Lord

கர்த்தரை பரிசுத்தம்பண்ணுங்கள்


I பேதுரு 3:15ல் எழுதியிருக்கிறபடி கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள் என்றால் என்ன, சற்று ஆராய்ந்து அறிந்து கொள்வோமா? தேவன் சொல்லுகிறதை அவர் சொல்லுகிற பிரகாரம் செய்கிறதே கர்த்தரை பரிசுத்தம் பண்ணுகிறதாம்.

எண்ணாகமம் 20: 12, “இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால்” இந்த பகுதியில் நாம் கவனித்தால் மோசேக்கு தேவன் கன்மலையோடு பேசும்படி கட்டளையிட்டதை செய்யாமல் தவறுதலாக கன்மலையை அடித்ததை பார்க்கிறோம். அப்படி செய்ததினால் தேவநீதி வெளிப்பட்டு கானானுக்குள் பிரவேசிக்கவில்லை.

லேவியராகமம் 10:3ல் என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு , இந்த இடத்திலும் தேவன் கட்டளையிடாத அக்கினியை தேவ சமூகத்துக்கு கொண்டுவந்த ஆரோனின் புத்திரர் கர்த்தரால் அடிக்கப்பட்டதை பார்க்கிறோம்.

கர்த்தராகிய இயேசுவோ! ஒரு பாவமும் இல்லாதவர், தாயின் கருவில் பரிசுத்த ஆவியினால் உருவாக்கப்பட்டு பிறத்தவர், என்னில் பாவம் உண்டென்று யார் சொல்லக்கூடும் என்று சொன்னவர், காட்டிக்கொடுத்தவனாலும் குற்றமில்லாத இரத்தம் என்று சாட்சி பெற்றவர், இராஜாக்களால் ஒரு குற்றம் கூட கண்டுபிடிக்கபடாதவர் சொல்லுகிறார், யோவான் 17:19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.

இயேசு தான் போதித்தவைகளை, அவர் முதலாவது கைகொண்டார். பிதாவின் சித்தம் என்று சொல்லி மரணபரியந்தம் தன்னை ஒப்புகொடுத்தார். ஒரு பாவமும் இல்லாத அவரே வார்த்தையினால் கீழ்ப்படிதலை நமக்கு காட்டி தன்னை பரிசுத்தமாக்குவேன் என்று நமக்கு மாதிரியை வைத்துபோயிருக்கிறார்.

தேவன் ஒரு மனிதனுக்கோ அல்லது சபைக்கோ அல்லது ஒரு கூட்ட மக்களுக்கோ ஒரு காரியத்தை செய் என்று சொல்லும்போது அதை அப்படியே உள் வாங்கி அவர் சொல்லுகிறபடியே செயல்படுத்த வேண்டும். அப்படி செய்கிறதே கர்த்தராகிய தேவனை பரிசுத்தம் பண்ணுதல். ஆமென்! ஆமென்! ஆமென்!

கிருபை யாவரோடும் இருப்பதாக ஆமென்!
கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவன்
சகோ புரூஸ்

Read in English

புதன், 22 நவம்பர், 2017

ஜீவனுக்கு உட்பட்டவர்கள் / Subject to Eternal Life

ஜீவனுக்கு உட்பட்டவர்கள்




யார் ஜீவனுக்கு உட்பட்டவர்கள் I யோவான் 3: 14 எழுதியிருக்கிற படி மரணத்தை விட்டு ஜீவனுக்கு உட்படுகிறவர்கள் சகோதரர்களிடத்தில் அன்பு கூருகிறவர்களே!

பழைய ஏற்ப்பாட்டின் படி குற்றமில்லாத இரத்தத்தை சிந்துவதை (எரேமியா 22:17) கொலையாக வேதம் காட்டினதுமல்லாமல் தேவனால் கடிந்துகொள்ளப் பட்டார்கள்.

ஆனால் புதியகற்பனைக்கு உறியவர்களாகிய நமக்கோ சரீர கொலை மாத்திரம் அல்ல சகோதரனிடத்தில் அன்பு கூராதிருந்தால் அதை மனுஷ கொலை பாதகன் என்று வேதம் அறிவிக்கிறது. அதை அறிந்து உணர்ந்து தேவனுக்கு பிரியமானபடி நடப்பது உத்தமம்.

கிறிஸ்துவை அறிந்தேன், இரட்சிப்பை பெற்றுக்கொண்டேன், ஒழுங்காக சபைக்கு வருகிறேன்! காணிக்கை, தசமபாகம் கொடுக்கிறேன்! சபையை சார்ந்த எல்லா ஊழியங்களிலும் பங்கு கொள்கிறேன்! அல்லது தேவனுக்கு ஊழியம் செய்கிறேன்! என்று சொல்லியும், ஆனால் சபைக்கு வருகிற மற்றொரு சகோதர/சகோதரியுடன் கசப்பு/பகை இருந்தாலோ அல்லது சொந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மீது ஏதோ ஒரு காரணதிற்காக பகை இருந்தாலோ அல்லது வேறு எதோ ஒரு காண்கிற சகோதரனை சகோதரியை பகைத்தால், ஜாக்கிரதை சகோதரேனே! சகோதரியே!

நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுப்பேன் என்று வாக்குபண்ணின நித்திய ஜீவனை இழந்துபோனீர்கள் என்று இப்பொழுதே அறிந்து மனம்திரும்புங்கள், உடனே சம்பந்த பட்டவர்களிடம் போய் ஒப்புரவாகுங்கள். அப்பொழுது மரணத்திற்கு நீங்கலாகி ஜீவனுக்கு உட்பட்டு இருப்பீர்கள். ஆவியானவர் சொல்லுகிறதை காது உள்ளவன் கேட்டக்ககடவன். பழைய கற்பனையைவிட புதிய கற்பனை மிகுந்த கருகலானதும் வாழ்வுக்கு போகிற வாசல் குறுகலானது என்பதை அறிந்து தேவன் எதிபார்க்கிற நீதியை இப்பொழுதே செய்திட ஆயத்தமாவோம்! ஜீவனுக்குள் உட்பட ஒருவரிலொருவர் அன்புகூருவோம்! அப்பொழுது ஒளியில் நிலைத்திருப்போம்! ஆமென்! ஆமென்! ஆமென்!

கிருபை யாவரோடும் இருப்பதாக ஆமென்!

கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவன்

சகோ புரூஸ்

Read in English

செவ்வாய், 21 நவம்பர், 2017

கடுகுவிதையளவு விசுவாசம் - Mustard Seed Faith

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கடுகுவிதையளவு விசுவாசம் இருந்தால் உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று சொல்லுகிறாரே! (மத்தேயு 17:20) அது என்ன கடுகுவிதையளவு விசுவாசம்? கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது! என்று ஒரு வழக்க சொல் உண்டு. அதாவது கடுகு சிறியதாயிருந்தாலும் அதன் தன்மை மாறுகிறதே இல்லை என்று பொருள்! 

கடுகு முழுமையாய் விளைந்த பின்புதான் அதை எடுத்து வருகிறார்கள், அதன் பின்பே அதை பயன்படுத்த முடியும்! ஆகவே உங்கள் விசுவாசம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் முழுமை பெற்றிருந்தால் போதுமானது. உதாரணமாக ஒரு குஷ்டரோகி ஆண்டவரிடத்தில் வந்து உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான், சுத்தமானான்! 

ஒரு சகோதரி இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் சுகமாவேன் என்று முழுமையாய் நம்பி வந்து தொட்டாள் விடுதலையோடு சென்றாள்! நுற்றுக்கு அதிபதி ஒருவன் இயேசுவினிடத்தில் வந்து ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் என் வேலைக்காரன் பிழைப்பான் என்றான் சுகத்தை பெற்றுக்கொண்டான். மற்றொருவன் நீர்(இயேசு) வந்து கைகளை வையும் அப்பொழுது பிழைப்பாள் என்றான், அதுவும் நிறைவேறியது. 

இந்த சில உவமைகளில் நாம் பார்க்கிறதுபோல் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான விசுவாசம் உடையவர்களாய் இருந்தார்கள். ஆகவே தேவன்! எப்படிப்பட்டவிதமான விசுவாசமாயிருந்தாலும் தம் மீது முழுமையாய் விசுவாசிக்கிறவர்களுக்கு அதை வாயக்கப்பண்ணுகிறார். 

ஆக கடுகுவிதையளவு என்பது நீங்கள் விசுவாசிக்கிறதில் முழுமையாய் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். 

சத்துருவை துரத்தவும், பாவங்களை ஜெயிக்கவும், ஆசீர்வாத தடைகள் நீங்கி தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவும், பிறரை ஆசீர்வதிக்கவும் முழுமையாய் தேவனை விசுவாசிப்போம்! அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்வோம்! கிருபை யாவரோடும் இருப்பதாக! 

கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவன்
சகோ புருஸ் ராப்சன்
+91 970 36 76 184


Read in English